ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

ஓய்வூதியம் பெறும் முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி! மகன் கணக்கில்?

ஓய்வூதியம் பெற வந்த முதியவரின் வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி இருப்பதாக வந்த தகவலால்..

News image

வங்கிப் பணி - file photo

Updated On :15 ஜூலை 2026, 3:19 pm IST

மாத ஓய்வூதியத்தை எடுக்க வங்கிக்கு வந்த முதியவருக்கு, அவரது வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி இருப்பதாக ஊழியர்கள் சொன்னபோது, ஒரு சில விநாடிகள் இதயம் நின்று பிறகு துடித்திருக்கலாம்.

பிகார் மாநிலம் முஸாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காமேஷ்வர் மிஸ்ரா என்பவர், முதியோருக்கான ஓய்வூதியத் தொகையை பெற்று வருகிறார். அந்தத் தொகையை பெறுவதற்கு பொதுச் சேவை மையத்துக்கு வந்த காமேஷ்வர், ஓய்வூதியத் தொகையை எடுத்துக் கொண்டு நேராக வீட்டுக்கு வராமல், தன்னுடைய வங்கிக் கணக்கில் மீதம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள விரும்பினார். வங்கி ஊழியரிடம் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று அவர் சாதாரணமாகக் கேட்க, ஊழியரோ, ரூ.759 கோடி என்று சாதாரணமாகவே சொல்லிவிட்டார். பிறகுதான், சொன்னவருக்கும் அதனைக் கேட்டவருக்கும் அதிர்ச்சி.

சரி இது ஏதோ தொழில்நுட்பப் பிரச்னை என்று நனைத்து விட்டு விடாமல், காமேஷ்வருடன் வந்த மாற்றுத் திறனாளி மகன், தன்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் கேட்டுள்ளார். அதிலும் என்ன சாதாரண தொகையா இருந்திருக்கும். அதிலும் மிகப்பெரிய தொகைதான் இருந்துள்ளது. இரண்டையும் கூட்டினால் கிட்டத்தட்ட ரூ.1500 கோடி அளவுக்கு வரும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

வேறு யாராக இருந்தாலும், அதில் பாதியை பணமாக எடுத்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்திருப்பார்கள். ஆனால், அவர்களோ, வங்கியிடம் இது குறித்து புகார் தெரிவித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொழில்நுட்பப் பிரச்னையாகத்தான் இருக்கும் என்று நம்பும் தந்தையும் - மகனும் விரைவில் இந்த பிரச்னை சரி செய்யப்படும், எனினும் மக்களும் இதுபற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததாகக் கூறுகிறார்கள்.

Summary

A shock awaited a pensioner! Rs 759 crore in his bank account! And in his son's account?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.