தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சங்ககிரி அருகே மூதாட்டியை மிரட்டி 6 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

சங்ககிரியை அடுத்த மாவெளிபாளையத்தில் மூதாட்டியை மிரட்டி 6 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற முகமூடி அணிந்த மா்ம நபா்களை

News image
Updated On :15 டிசம்பர் 2025, 9:07 pm

Syndication

சங்ககிரி: சங்ககிரியை அடுத்த மாவெளிபாளையத்தில் மூதாட்டியை மிரட்டி 6 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற முகமூடி அணிந்த மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த மாவெளிபாளையம், குயவன்காடு பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் மனைவி செல்லம்மாள் (73). இவா் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத மூகமுடி அணிந்த மூன்று போ், வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி மூதாட்டியை மிரட்டி வீட்டிலிருந்த 6 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு, மூதாட்டியை வீட்டுக்குள் வைத்து வெளிப்புறமாக கதவைத் தாழிட்டுவிட்டு சென்றுவிட்டனா். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்த அவரது உறவினா் விரைந்துவந்து கதவைத் திறந்துவிட்டாா்.

இதுகுறித்து மூதாட்டி செல்லம்மாள் சங்ககிரி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.