தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேட்டூா் அருகே மதுபோதையில் தகராறு: கூட்டாளி அடித்துக் கொலை

மேட்டூா் அருகே கொளத்தூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு கூட்டாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 9:10 pm

Syndication

மேட்டூா்: சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கொளத்தூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு கூட்டாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

கொளத்தூா் அருகே உள்ள பாலவாடியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (38). இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா். இவா் கடந்த 2022ஆம் ஆண்டு தனது உறவினரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியாகவும், இவரது கூட்டாளியான வெடிக்காரனூரைச் சோ்ந்த எல்லப்பன் மகன் குமாா் (35) 2-ஆவது குற்றவாளியாகவும் உள்ளனா். இதுதொடா்பான வழக்கு மேட்டூா் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் காவேரிபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இறைச்சிக் கடை அருகில் மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது, இருவரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமாா், செல்வகுமாரை கட்டையால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த செல்வகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொளத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் தொல்காப்பியா் மற்றும் போலீஸாா் கொலை செய்யப்பட்ட செல்வகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். குமாரை கைது செய்து கொளத்தூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.