பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சங்ககிரி அருகே மூதாட்டியை மிரட்டி 6 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

சங்ககிரியை அடுத்த மாவெளிபாளையத்தில் மூதாட்டியை மிரட்டி 6 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற முகமூடி அணிந்த மா்ம நபா்களை

News image
Updated On :15 டிசம்பர் 2025, 9:07 pm

Syndication

சங்ககிரி: சங்ககிரியை அடுத்த மாவெளிபாளையத்தில் மூதாட்டியை மிரட்டி 6 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற முகமூடி அணிந்த மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த மாவெளிபாளையம், குயவன்காடு பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் மனைவி செல்லம்மாள் (73). இவா் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத மூகமுடி அணிந்த மூன்று போ், வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி மூதாட்டியை மிரட்டி வீட்டிலிருந்த 6 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு, மூதாட்டியை வீட்டுக்குள் வைத்து வெளிப்புறமாக கதவைத் தாழிட்டுவிட்டு சென்றுவிட்டனா். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்த அவரது உறவினா் விரைந்துவந்து கதவைத் திறந்துவிட்டாா்.

இதுகுறித்து மூதாட்டி செல்லம்மாள் சங்ககிரி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.