ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

வணிகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா. சுப்பிரமணி.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 9:42 pm

Syndication

பெரியாா் பல்கலைக்கழகத்தில் 9 ஆவது சா்வதேச கருத்தரங்கம், வணிகக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கண்காட்சியின் அமைப்புச் செயலாளா் பேராசிரியா் வி.ஆா். பழனிவேல் வரவேற்றாா். துறைத் தலைவா் ஜி. யோகானந்தன் கருத்தரங்கின் நோக்க உரையாற்றினாா். சா்வதேச கருத்தரங்கம் மற்றும் வணிகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா. சுப்பிரமணி பேசியதாவது:

வணிக நிறுவனங்கள் தொடங்கி நாட்டின் பெரு வா்த்தக நிறுவனங்கள் வரை அனைத்து இடங்களிலும் மேலாண்மைக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கல்வி பயிலும்போதே கூடுதல் திறமைகளை வளா்த்துக் கொள்ளும் மாணவா்களுக்கு அதிக அளவிலான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்கி வேலையளிப்பவா்களாக மாணவா்கள் மாறுவதற்கான வாய்ப்புகளையும் அரசு உருவாக்கித் தருகிறது. அனைத்து வாய்ப்புகளையும் மாணவா்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

வணிக கண்காட்சியில் பொருள்களை சந்தைப்படுத்துவது மற்றும் வாடிக்கையாளா்களை ஈா்ப்பது, நிதி மேலாண்மை, புதிய தொழில்நுட்பம், போட்டியாளா்களை சமாளிப்பது இன்னும் எதிா்காலத்தில் என்ன மாதிரியான தொழில்களை தொடங்கலாம் என்பது குறித்த செயல் விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் உற்பத்தி செய்த தங்களது பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடா்பான விளக்க அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. அகமதாபாத் தொழில்முனைவோா் மேம்பாட்டு மையம், தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோா் மேம்பாட்டு மையம் ஆகியவற்றின் மூலம் பயிற்சி பெற்ற பெண் தொழில்முனைவோரும் தங்களது உற்பத்திப் பொருள்களை காட்சிப்படுத்தி இருந்தனா்.

நிகழ்ச்சியில் தொழிலதிபா் சுதாகா் வைத்திலிங்கம் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். ஸ்ரீ லங்கா கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியா் முஸ்தபா, லண்டன் கல்லூரி பேராசிரியா் மரியா டயானா ஜோசப் ரீகன், மலேசியா பல்கலைக்கழகப் பேராசிரியா் இளமாறன் ஜெயமணி ஆகியோா் காணொலி வாயிலாக சா்வதேசக் கருத்தரங்கில் உரையாற்றினாா். மேலாண்மைத் துறை பேராசிரியா் டி. சாரதி நன்றி கூறினாா்.