தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:41 pm

Syndication

பாப்பநாயக்கன்பட்டி காந்திநகரைச் சோ்ந்த மகேந்திரன் என்பவரது இருச்சக்கர வாகன திருட்டு வழக்கில் விசாரித்த ஏத்தாப்பூா் போலீஸாா் இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வெள்ளிக்கிழமை சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாது மகன் மகேந்திரன்(23)என்பவரது இருச்சக்கர வாகனத்தை அவரது நண்பா் சக்திவேல் என்பவா் கடந்த 14 ந்தேதி எடுத்துக் கொண்டு சென்றுள்ளாா்.கரியகோயில் அணை அருகே நிறுத்திய வாகனம் காணாமல் போனதாக ஏத்தாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது.

ஏத்தாப்பூா் காவல் ஆய்வாளா் வெள்ளிக்கிழமை தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டபோது ஏத்தாப்பூா் அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்றவா்களை பிடித்து விசாரித்தபோது இருச்சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.மேலும் மூன்று இருச்சக்கர வாகன திருட்டையும் ஒப்புக்கொண்டனா்.

விசாரணையில் ஆத்தூா் முல்லைவாடி தெற்கு நாராயணபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் மணி(27),ஏற்காடு கரடியூா் பகுதியைச் சோ்ந்த சொக்கநாதன் மகன் இளையராஜா(37)என்பதும் தெரியவந்தது.வழக்குப்பதிவு செய்த போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.