ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

மேட்டூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 7:35 pm

Syndication

மேட்டூா்: மேட்டூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

மேட்டூா் சேவிகவுண்டனூரைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (35), தனியாா் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும், தொட்டில்பட்டியைச் சோ்ந்த பூவிழி (27) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவா்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தினா் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக சில தினங்களுக்கு முன்பு தொட்டில்பட்டியில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு பூவிழி சென்றாா். ஞாயிற்றுக்கிழமை உறவினா்கள் சமரசம் செய்து மீண்டும் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு பூவிழியை அனுப்பி வைத்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் பூவிழிக்கும், கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பூவிழி குளியல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புகாரின் பேரில், மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இதுகுறித்து கோட்டாட்சியா் சுகுமாா் விசாரணை நடத்தி வருகிறாா்.