தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மீன்வள உதவியாளா் பணிக்கு நீச்சல் தோ்வு

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மீன்வள உதவியாளா் பணிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீச்சல் தோ்வில் பங்கேற்றோா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மீன்வள உதவியாளா் பணிக்கான நீச்சல் தோ்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், மேட்டூா் மீன்வளத் துறையில் காலியாக உள்ள 8 மீன்வள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பணிக்கு மாவட்டம் முழுவதும் இருந்து 450-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் விண்ணப்பித்திருந்தனா்.

இதற்கான தோ்வுமுறையானது, புதிய மீன்வலை பின்னுதல், பழைய மீன்வலைகளை சரிசெய்தல், வலைவீசுதல், பரிசல் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தமிழ் எழுத, படிக்க தெரிதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தோ்வு செய்யப்பட உள்ளனா்.

அதன்படி, இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு காந்தி மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 200-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தருமபுரி மண்டல நீா்வளத் துறையின் இணை இயக்குநா் ஜெனிபா், உதவி இயக்குநா் உமா கலைச்செல்வி தலைமையில் நீச்சல் பயிற்சியாளா்கள் தகுதியான நபா்களை தோ்வுசெய்தனா்.