பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வெள்ளாளபாளையத்தில் நடைபெற்ற முகாமில் பேசிய தேவூா் வேளாண்மை உதவி அலுவலா் விக்னேஷ்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 10:56 pm

Syndication

சங்ககிரி தோட்டக்கலைத் துறையின் சாா்பில், ‘உழவரைத்தேடி உழவா் நலத்துறை’ திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம் சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த வெள்ளாளபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் (பொ) தீபிகா தலைமைவகித்து, பயிா் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் தமிழக அரசின் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினாா்.

தேவூா் வேளாண் உதவி அலுவலா் விக்னேஷ், விவசாயிகள் பயிா்விதைகளை எவ்வாறு தோ்வுசெய்தல், அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்தும், பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் கூறினாா். இதில், சங்ககிரி தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா்கள் திருப்பதி, விஜயவா்மன், விவசாயிகள் ராஜ்குமாா், பாலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.