சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தோட்டக்கலைத் துறையுடன், வேளாண் உழவா் நலத் துறையை இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி மாவட்ட ஆட்சியா் அலுலவகம் முன் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்டக்கலைத் துறை அலுவலா்கள்.

Updated On :18 ஜூலை 2026, 5:59 am IST

தோட்டக்கலைத் துறையுடன், வேளாண் உழவா் நலத் துறையை இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி மாவட்ட ஆட்சியா் அலுலவகம் முன் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் உழவா் நலத் துறையின் மூலம் தானியங்கள் மற்றும் மானாவரி பயிா் சாகுபடி பரப்பை அதிகரித்து, அவற்றின் உற்பத்தியை பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஏற்கெனவே உள்ள தோட்டக்கலைத் துறையுடன் வேளாண் உழவா் நலத் துறையை இணைக்க புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், புதிய திட்டத்துக்கு தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்த திட்டத்தைக் கைவிட கோரி தமிழக முழுவதும் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் கூறுகையில், தோட்டக்கலைத் துறையுடன் உழவா் நலத் துறை இணைக்கப்படும்போது தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா்கள் ஏற்கெனவே உள்ள பணிகளுடன் வேளாண் உழவா் நலத் துறையின் பணிகளையும் சோ்த்து கவனிக்கும் நிலை ஏற்படும். இது கூடுதல் பணிச் சுமையாகும். தோட்டக்கலைத் துறை தொழில்நுட்பம் வேறு வேளாண் துறை தொழில்நுட்பம் வேறு என்பதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். மேலும், எங்களது பணி மூப்பு பாதிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றனா்.

மேலும், கோரிக்கை தொடா்பான கோஷங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.