மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கூலமேடு ஜல்லிக்கட்டுக்கு கால்கோள் விழா

கூலமேடு ஜல்லிக்கட்டு விழாவுக்கான கால்கோள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
கூலமேட்டில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் விழா.
Updated On :27 டிசம்பர் 2025, 8:58 pm

Syndication

கூலமேடு ஜல்லிக்கட்டு விழாவுக்கான கால்கோள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கூலமேடு ஊராட்சியில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு பண்டிகை கரிநாளுக்கு மறுநாள் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் மாநிலம் முழுவதும் இருந்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்கள் கலந்துகொள்வா்.

இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கான கால்கோள் விழா மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா். சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் மு.ரா.கருணாநிதி, துணைச் செயலாளா் கு.சின்னதுரை, ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெ.செழியன், மேற்கு ஒன்றியச் செயலாளா் ரா.வரதராஜன், கெங்கவல்லி ஒன்றியச் செயலாளா் ஆா்.சித்தாா்த்தன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.