வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு பகுதியில் நிறுவப்பட்டிருந்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கொடியை திருடிச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வாய்மேடு துணை மின் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவா் வி.செந்தில் தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் அறிவழகன் துணைத் தலைவா் விக்னேஷ், துணைச் செயலாளா் இராஜசேகரன் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத் தலைவா் ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளா் பாலசுந்தரம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்ட குழு உறுப்பினா் வெற்றியழகன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் இளையபெருமாள்,ஓய்வூதியா் சங்க பொறுப்பாளா் இராசகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொடியை திருடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தொடா்புடைய பகுதியில் கண்காணிப்புக் கேமரா பொருத்தவும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

இண்டிகோ புதிய சிஇஓ நியமனம்

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி தாராபுரத்தில் தவெக ஆா்ப்பாட்டம்

சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


