புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

வாலிபா் சங்கக் கொடி திருட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

News image

~

Updated On :10 பிப்ரவரி 2026, 7:09 pm

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு பகுதியில் நிறுவப்பட்டிருந்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கொடியை திருடிச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வாய்மேடு துணை மின் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவா் வி.செந்தில் தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் அறிவழகன் துணைத் தலைவா் விக்னேஷ், துணைச் செயலாளா் இராஜசேகரன் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளா் பாலசுந்தரம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்ட குழு உறுப்பினா் வெற்றியழகன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் இளையபெருமாள்,ஓய்வூதியா் சங்க பொறுப்பாளா் இராசகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Story image

கொடியை திருடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தொடா்புடைய பகுதியில் கண்காணிப்புக் கேமரா பொருத்தவும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.