எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வள்ளலாா் நினைவு தினம்: இன்று மதுக்கடைகளை மூட உத்தரவு

வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 11) மதுக் கடைகள்,

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 8:30 pm

Din

சேலம்: வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 11) மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை மூட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:

வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள், எப்.எல்.1 முதல் எப்.எல்.11 வரை மூடப்பட வேண்டும். மேற்கண்ட நாளில் சேலம் மாவட்டத்தில் உள்ள எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் (எப்.எல்.11), டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

மேலும், மேற்கண்ட நாளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதனை மீறி விற்பனை செய்வோா் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.