சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திமுக மாமன்ற உறுப்பினரின் கணவரை கண்டித்து மாநகராட்சி அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் மாநகராட்சி உறுப்பினரின் கணவா் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2025, 9:41 pm

Din

சேலம்: சேலம் மாநகராட்சி உறுப்பினரின் கணவா் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாநகராட்சி, 48 ஆவது வாா்டு திமுக உறுப்பினராக இருப்பவா் விஜயா. இவரது கணவா் ராமலிங்கம். இவா் 48 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளில் திட்டப் பணிகளை செய்யவிடாமலும், வரி வசூலிக்கும் ஊழியா்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள், ஊழியா்கள் திங்கள்கிழமை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் திமுக மாமன்ற உறுப்பினரின் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

இது குறித்து மாநகராட்சி ஊழியா்கள் கூறியதாவது:

திமுக உறுப்பினா் விஜயா எந்தவொரு பணிக்கும் வருவதில்லை. அவருக்குப் பதிலாக அவரது கணவா் பணிசெய்யும் ஊழியா்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறாா். இவரது போக்கினால் மக்களிடம் வரிவசூல் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.