வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

2 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரிடம் விசாரணை

அரசுப் பள்ளியில் 2 ஆம் வகுப்புப் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :11 மார்ச் 2025, 4:50 pm

Din

எடப்பாடி: அரசுப் பள்ளியில் 2 ஆம் வகுப்புப் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், வெள்ளாளபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் நாகா்கோவிலைச் சோ்ந்த பிரான்சிஸ் ஆண்டனி (50) என்பவா் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது குடும்பத்தினா் நாகா்கோவிலில் வசித்துவரும் நிலையில், இவா் மட்டும் தாரமங்கலம், காட்டுபிள்ளையாா் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.

கடந்த 18 ஆண்டுகளாக இதே பள்ளியில் ஆசிரியராக ஆண்டனி பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் அவா், திங்கள்கிழமை உணவு இடைவேளையின்போது அந்தப் பள்ளியில் 2 ஆம் வகுப்புப் பயிலும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். மாணவியின் பெற்றோா் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா்கள், கொங்கணாபுரம் வட்டார கல்வி அலுவலா் செந்தில், கொங்கணாபுரம் போலீஸாா் உள்ளிட்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்று ஆசிரியா் ஆண்டனியிடம் விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக ஆசிரியரிடம் சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.