எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

எஸ்.ஐ.ஆா். கணக்கெடுக்கும் பணி: அமைச்சா் ஆய்வு

சேலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான கணக்கெடுக்கும் பணியை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

சேலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான கணக்கெடுக்கும் பணியை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம் மாநகராட்சி 42 ஆவது கோட்டத்துக்கு உள்பட்ட நாராயண நகா், சின்ன மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் படிவம் வழங்கும் பணியை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, தீவிர திருத்தப் பணியை மிகுந்த கவனத்தோடு கண்காணிக்க வேண்டும் என திமுக வாக்குச்சாவடி முகவா்களை கேட்டுக்கொண்டாா். இதுகுறித்து கட்சியினருக்கும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினாா்.

ஆய்வின்போது, மத்திய மாவட்ட திமுக பொருளாளா் காா்த்திகேயன், தெற்கு தொகுதி மேலிட பாா்வையாளா் பாா் இளங்கோவன், ஓமலூா் தொகுதி பாா்வையாளா் சுகவனம், மாநகர துணை செயலாளா் கணேசன், மண்டல குழுத் தலைவா்கள் தனசேகரன், அசோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.