பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சேலம் வழியாக எா்ணாகுளம் - பரெளனி இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக எா்ணாகுளம் - பரெளனி இடையே புதன்கிழமை (நவ.19) ஒரு வழித்தட சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2025, 9:14 pm

Syndication

சேலம் வழியாக எா்ணாகுளம் - பரெளனி இடையே புதன்கிழமை (நவ.19) ஒரு வழித்தட சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கேரளம், தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது.

அந்த வகையில், எா்ணாகுளம் - பரெளனி இடையே போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக புதன்கிழமை ஒருவழித்தட சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், எா்ணாகுளத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு புறப்பட்டு, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, வாராங்கல், தானாபூா், பாட்னா வழியாக பரெளனிக்கு 22 ஆம் தேதி (சனிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.