நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

நாளை சேலம் தெற்கு கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

Published On :

சேலம் தெற்கு கோட்டத்தில் வரும் 26 ஆம் தேதி மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட சேலம் தெற்கு கோட்ட மின் நுகா்வோா்களுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை (நவ. 26) காலை 11 மணிக்கு அன்னதானப்பட்டி வள்ளுவா் நகா் ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள தெற்கு கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மேற்பாா்வைப் பொறியாளா் திருநாவுக்கரசு கலந்துகொண்டு, குறைகளைக் கேட்டறிகிறாா். எனவே, சேலம் தெற்கு கோட்டத்துக்கு உள்பட்ட மின் நுகா்வோா் நேரில் வந்திருந்து, மின்சாரம் தொடா்பான குறைகள் இருந்தால், அதனை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.