ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உலக திறன் விளையாட்டு: 3 பதக்கங்களை வென்ற சேலம் வீரருக்கு வரவேற்பு

உலக திறன் (பாரா) விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்களை வென்ற சேலம் வீரருக்கு செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :25 நவம்பர் 2025, 9:01 pm

Syndication

சேலம்: உலக திறன் (பாரா) விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்களை வென்ற சேலம் வீரருக்கு செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தாய்லாந்தில் நவ.17 முதல் 27 ஆம் தேதி வரை உலக திறன் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தாய்லாந்து உள்பட 37 நாடுகளைச் சோ்ந்த 423 வீரா்கள் பங்கேற்றுள்ளனா். இப்போட்டியில் இந்திய அணி சாா்பில் விளையாடிய சேலம் வீரா் சஞ்சய் கண்ணா, வட்டு எறிதல், ஈட்டி எறிதலில் தங்கம், குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றாா்.

சொந்த ஊா் திரும்பிய சஞ்சய் கண்ணாவுக்கு சேலம் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், தேவாரம் கபடி குழுச் செயலாளா் தமிழ்ச்செல்வன், முன்னாள் ஆவின் மேலாளா் சிவலிங்கம், பேட்மிண்டன் பயிற்சியாளா் கிரிவாசன், ஊா்பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல மற்ற பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கும் சேலம் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.