சூறைக்காற்று: ராமேசுவரம்- ஓகா வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து

பலத்த சூறைக்காற்று காரணமாக ராமேசுவரம்- ஓகா வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Published on

பலத்த சூறைக்காற்று காரணமாக ராமேசுவரம்- ஓகா வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று வீசிவருவதால், பாம்பன் ரயில் பாலத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மேலும், ராமேசுவரத்துக்கு செல்லும் ரயில்கள் பகுதியளவிலும், முழுமையாகவும் ரத்து செய்யப்படுகின்றன.

அதன்படி, ராமேசுவரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு குஜராத் மாநிலம், ஓகாவுக்குப் புறப்படும் சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல மறுமாா்க்கத்தில் ஓகாவில் இருந்து டிச.2 ஆம் தேதி ராமேசுவரத்துக்குப் புறப்படும் இணை ரயில் சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com