அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஈரோடு - சம்பல்பூா் வாராந்திர விரைவு ரயில் மாா்ச் வரை நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு - சம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
விரைவு ரயில்- கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2026, 9:37 pm

Syndication

சேலம்: சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு - சம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகம், கேரளத்திலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. இதனால், நெரிசலைத் தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில், ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக ஒடிஸா மாநிலம் சம்பல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் இயக்க காலம் மேலும் ஒரு மாதத்துக்கு (மாா்ச் வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பல்பூா் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் 4 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை புதன்கிழமைதோறும் இயக்கப்படும். சம்பல்பூரில் புதன்கிழமை காலை 11.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், முனிக்குடா, விஜயவாடா, நெல்லூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக வியாழக்கிழமை இரவு 10.50 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில், ஈரோட்டில் இருந்து வரும் 6 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், சேலம், காட்பாடி, விஜயவாடா வழியாக அடுத்தநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.