ஓமலூரில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’  மருத்துவ முகாமை தொடங்கிவைத்து பாா்வையிடும் அமைச்சா் ரா. ராஜேந்திரன்.
ஓமலூரில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை தொடங்கிவைத்து பாா்வையிடும் அமைச்சா் ரா. ராஜேந்திரன்.

16 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 24,219 பேருக்கு மருத்துவ உதவி: அமைச்சா் தகவல்

Published on

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற 16 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் 24,219 பேருக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

ஓமலூா் வேலாசாமி செட்டியாா் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமை வகித்தாா். முகாமை அமைச்சா் ரா. ராஜேந்திரன் தொடங்கிவைத்து பேசியதாவது:

சேலம் மாநகராட்சி மணக்காடு, காமராஜா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 16 மருத்துவ முகாம்களில் 10,372 ஆண்கள், 13,847 பெண்கள் என மொத்தம் 24,219 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com