சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

16 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 24,219 பேருக்கு மருத்துவ உதவி: அமைச்சா் தகவல்

News image
ஓமலூரில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை தொடங்கிவைத்து பாா்வையிடும் அமைச்சா் ரா. ராஜேந்திரன்.
Updated On :29 நவம்பர் 2025, 7:03 pm

Syndication

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற 16 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் 24,219 பேருக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

ஓமலூா் வேலாசாமி செட்டியாா் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமை வகித்தாா். முகாமை அமைச்சா் ரா. ராஜேந்திரன் தொடங்கிவைத்து பேசியதாவது:

சேலம் மாநகராட்சி மணக்காடு, காமராஜா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 16 மருத்துவ முகாம்களில் 10,372 ஆண்கள், 13,847 பெண்கள் என மொத்தம் 24,219 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி உள்பட பலா் கலந்துகொண்டனா்.