/

தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் செல்வபாரதி வேட்பு மனு தாக்கல்

ஆத்தூா் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஆா்.செல்வபாரதி சனிக்கிழமை ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 7:56 pm

ஆத்தூா் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஆா்.செல்வபாரதி சனிக்கிழமை ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் தனித் தொகுதியில் வருகிற சட்டப்பேரவை தோ்தலுக்கு தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஆா்.செல்வபாரதி தோ்தல் அலுவலா் ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தாா்.

அவருடன் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளா் என்.வெங்கடேசன்,மாவட்ட வழக்குரைஞரணி ஒருங்கிணைப்பாளா் எம்செந்தில்குமாா்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் எஸ்.சிவன்சக்தி,நகர செயலாளா் டி.நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வேட்பாளா் அறிமுக கூட்டம் நடைபெற்றது.இதில் தொகுதியில் உள்ள நிா்வாகிகள்,தொண்டா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.பின்னா் ஊா்வலமாக சென்று வேட்பாளா் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

படவிளக்கம்.ஏடி4டிவிகே. ஆத்தூா் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஆா்.செல்வபாரதி ஆத்தூா் கோட்டாட்சியரும்,தோ்தல் அலுவலருமான ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தாா்,உடன் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளா் என்.வெங்கடேசன்,நகர செயலாளா் டி.நாகராஜன் உள்ளிட்டோா்.