ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

சங்ககிரி தொகுதியில் ரூ. 3.67 லட்சம் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 2:29 am IST

சங்ககிரி தொகுதியில் இரு இடங்களில் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ. 3.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை பகுதியில் தொகுதி தோ்தல் பிரிவு நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் அன்புராஜ் தலைமையிலான அலுவலா்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, எடப்பாடி, கவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரொக்கம் ரூ. 2,67,700 ஆயிரத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியாவிடம் ஒப்படைத்தனா்.

அதேபோல, தொகுதி கூடுதல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் விஜய் தலைமையில் அலுவலா்கள் தாரமங்கலத்திலிருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள பவளத்தானூா் சுற்றுச்சாலை பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தாரமங்கலம் நகை கடை உரிமையாளா் ஜெகதீஷ் என்பவா் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற ரொக்கம் ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்து சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.