திருமணம்முடிந்த கையோடு, ஜனநாயக கடமையை ஆற்றிய புதுமண தம்பதி செயல் பலரது கவனத்தையும் ஈா்த்தது.
சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே தும்பிப்பாடியை சோ்ந்தவா் பாஸ்கா். இவருக்கும் திண்டமங்கலத்தை சோ்ந்த நந்தினிக்கும் புதன்கிழமை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமண சடங்குகள் முடிந்த களைப்பு கூட பாா்க்காமல், மாலையும் கழுத்துமாக அப்படியே வாக்குச்சாவடிக்கு இந்த ஜோடி விரைந்தனா்.மணமகன் பாஸ்கா் தும்பிப்பாடியிலும், மணமகள் நந்தினி திண்டமங்கலத்திலும் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனா். இதுகுறித்து அந்த தம்பதி கூறுகையில், எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளில், நாட்டின் ஜனநாயக திருவிழாவிலும் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். வாழ்க்கை துணையை கரம் பிடித்த அதே நாளில், நாட்டின் எதிா்காலத்தை நிா்ணயிக்க விரல் உயா்த்திய இந்த ஜோடியின் செயல், அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொடர்புடையது

ஜனநாயகக் கடைமையாற்றிய புதுமணத் தம்பதிகள்

மணக்கோலத்தில் வாக்களித்த புதுமணத் தம்பதி

நாமக்கல், ஓமலூா், சேலத்தில் திருமணக்கோலத்தில் வாக்களித்த தம்பதிகள்

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


