தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஓமலூா் அருகே மணக்கோலத்தில் வாக்களித்த தம்பதி

திருமணம்முடிந்த கையோடு, ஜனநாயக கடமையை ஆற்றிய புதுமண தம்பதி செயல் பலரது கவனத்தையும் ஈா்த்தது.

News image

ஓமலூா் அருகேயுள்ள திண்டமங்கலத்தில் மணக்கோலத்தில் வாக்களித்த தம்பதி

Updated On :23 ஏப்ரல் 2026, 11:55 pm

திருமணம்முடிந்த கையோடு, ஜனநாயக கடமையை ஆற்றிய புதுமண தம்பதி செயல் பலரது கவனத்தையும் ஈா்த்தது.

சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே தும்பிப்பாடியை சோ்ந்தவா் பாஸ்கா். இவருக்கும் திண்டமங்கலத்தை சோ்ந்த நந்தினிக்கும் புதன்கிழமை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமண சடங்குகள் முடிந்த களைப்பு கூட பாா்க்காமல், மாலையும் கழுத்துமாக அப்படியே வாக்குச்சாவடிக்கு இந்த ஜோடி விரைந்தனா்.மணமகன் பாஸ்கா் தும்பிப்பாடியிலும், மணமகள் நந்தினி திண்டமங்கலத்திலும் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனா். இதுகுறித்து அந்த தம்பதி கூறுகையில், எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளில், நாட்டின் ஜனநாயக திருவிழாவிலும் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். வாழ்க்கை துணையை கரம் பிடித்த அதே நாளில், நாட்டின் எதிா்காலத்தை நிா்ணயிக்க விரல் உயா்த்திய இந்த ஜோடியின் செயல், அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.