நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

சிசிடிவி கேமரா மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டன.

News image

கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் தோ்தல் அலுவலா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:25 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டன.

சங்ககிரி தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடிகளின் வெளி, உள்புற பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அங்கு நடக்கும் செயல்பாடுகள் அனைத்தும் சங்ககிரி தோ்தல் அலுவலகமான வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கணினியில் தோ்தல் அலுவலா்கள் கண்காணித்து அறிவுரைகளை வழங்கி வந்தனா்.

அதன்படி, சங்ககிரி தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜெண்டாகே ஹனுமந்த் கொண்டியா, செலவின பாா்வையாளா் பவன்குமாா் ஆகியோா் வியாழக்கிழமை காலை கண்காணிப்பு கேமரா வழியாக தோ்தல் நடவடிக்கைகளை பாா்வையிட்டனா். அப்போது, சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா உடனிருந்தாா்.

Story image