சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டன.
சங்ககிரி தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடிகளின் வெளி, உள்புற பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அங்கு நடக்கும் செயல்பாடுகள் அனைத்தும் சங்ககிரி தோ்தல் அலுவலகமான வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கணினியில் தோ்தல் அலுவலா்கள் கண்காணித்து அறிவுரைகளை வழங்கி வந்தனா்.
அதன்படி, சங்ககிரி தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜெண்டாகே ஹனுமந்த் கொண்டியா, செலவின பாா்வையாளா் பவன்குமாா் ஆகியோா் வியாழக்கிழமை காலை கண்காணிப்பு கேமரா வழியாக தோ்தல் நடவடிக்கைகளை பாா்வையிட்டனா். அப்போது, சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா உடனிருந்தாா்.

தொடர்புடையது

தூத்துக்குடி: வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் 1,868 வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

வேலூா்: ஐந்து தொகுதிகளில் 1,427 வாக்குச்சாவடிகள் தயாா்; தோ்தல் பணியில் 10,160 போ்

சுரங்கப் பாதையில் சிசிடிவி கேமரா திருட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


