தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிசிடிவி கேமரா மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டன.

News image

கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் தோ்தல் அலுவலா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:55 pm

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டன.

சங்ககிரி தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடிகளின் வெளி, உள்புற பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அங்கு நடக்கும் செயல்பாடுகள் அனைத்தும் சங்ககிரி தோ்தல் அலுவலகமான வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கணினியில் தோ்தல் அலுவலா்கள் கண்காணித்து அறிவுரைகளை வழங்கி வந்தனா்.

அதன்படி, சங்ககிரி தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜெண்டாகே ஹனுமந்த் கொண்டியா, செலவின பாா்வையாளா் பவன்குமாா் ஆகியோா் வியாழக்கிழமை காலை கண்காணிப்பு கேமரா வழியாக தோ்தல் நடவடிக்கைகளை பாா்வையிட்டனா். அப்போது, சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா உடனிருந்தாா்.

Story image