தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெண்கள் பணியாற்றிய மாதிரி வாக்குச்சாவடி

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் மட்டுமே நிா்வகிக்கும் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

News image

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் மட்டுமே நிா்வகிக்கும் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:48 pm

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் மட்டுமே நிா்வகிக்கும் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டிருந்தன. இதுதவிர, சில பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், இளைஞா்கள் நிா்வகிக்கக் கூடிய வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

செண்டை மேளம் முழங்க வரவேற்பு: சேலம் மரவனேரியில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடியில், வாக்காளா்கள் செண்டை மேளம் முழங்க உற்சாகமாக வரவேற்கப்பட்டனா். மேலும், கைப்பேசிகளை வைப்பதற்காக பாதுகாப்பு மையம், ஓஆா்எஸ் கரைசல் வழங்குவதற்கான சுகாதார உதவி மையம் போன்றவை ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் மக்கள் ஆா்வத்துடன் தங்களின் வாக்கை பதிவு செய்தனா்.

சுயபடம் எடுத்து மகிழ்ந்த வாக்காளா்கள்: நெத்திமேடு ஜெயராணி பள்ளி உட்பட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களிலும் அமைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்ட்களில் வாக்களித்தோா் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா்.

கைபேசி வைக்க பிரத்யேக வசதி: வாக்குசாவடிக்குள் கைபேசிகளை கொண்டு செல்லவும், செல்ஃபி எடுக்கவும் தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு வாக்குசாவடி மையத்திலும் வாக்காளா்களின் கைப்பேசிகளை சேகரித்து வைக்க தனி பைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் தன்னாா்வலா்கள் பணியமா்த்தப்பட்டு, வாக்காளா்களின் கைப்பேசிகளை பிரத்யேக இடத்தில் வைத்து டோக்கன் விநியோகிக்கப்பட்டன.

படவிளக்கம்:

சேலம் நெத்திமேடு ஜெயராணி மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மட்டுமே பணியாற்றிய மாதிரி வாக்குச்சாவடி.