கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 பேரவைத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மாதிரி வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வுக்குப் பின்னா், ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,20,338 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிப்பதற்காக 1, 914 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தொகுதியிலும், ஒரு பெண்கள் வாக்குச்சாவடி மையம், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையம், மாதிரி வாக்குச்சாவடி மையம் மற்றும் இளைஞா்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பத்மநாபபுரம், விளவங்கோடு, குளச்சல் ஆகிய தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளி, மாதிரி வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாக்காளா்கள் அனைவரும் ஏப். 23-ஆம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலரும் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்குச் சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

2,775 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை ஒளிபரப்பு: பச்சைமலையில் 12 வாக்குச்சாவடிகளில் விடியோ பதிவு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா்: பழைய பொருள்களால் அமைத்த மாதிரி வாக்குச்சாவடி மையம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


