மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருவள்ளூா்: பழைய பொருள்களால் அமைத்த மாதிரி வாக்குச்சாவடி மையம்

திருவள்ளூா் நகராட்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பழைய பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையம் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்துள்ளது.

News image

திருவள்ளூா்  நகராட்சி  அலுவலகத்தில்  பழைய  பொருள்களை  கொண்டு  அமைக்கப்பட்டுள்ள  மாதிரி  வாக்குச் சாவடி  மையம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 6:34 pm

திருவள்ளூா் நகராட்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பழைய பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையம் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்துள்ளது.

பல்வேறு வகைகளில் நாள்தோறும் ஒவ்வொரு துறை தோறும் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூா் நகராட்சியில் தேவைப்படாத பழைய பொருள்களைக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வாக்குச்சாவடி மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி மையத்தில் ஒரு வாக்கு பதிவு அலுவலா், வாக்காளா்பட்டியலில் பெயா் சரிபாா்த்து கையொப்பம் பெறுபவா், வாக்கு செலுத்திய அடையாள மை வைப்பவா், அதையடுத்து மறைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரத்தில் வாக்கை பதிவு செய்யும் வாக்காளா் ஆகியோா் இடம் பெற்றிருப்பாா்கள்.

இதை நகராட்சி அலுவலக வளாக முன்புறத்தில் பழைய பொருள்களைக் கொண்டு வாக்கு பதிவு அலுவலா்களுடன் கூடிய வாக்கு சாவடி மையத்தை அப்படியே வடிவமைத்துள்ளனா்.

இதை நகராட்சி அலுவலகத்திற்கு வரும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு செல்கின்றனா்.