வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தவா்கள் மீண்டும் திரும்புவதற்கு வசதியாக வரும் திங்கள்கிழமை (ஏப். 27) வரை சேலம் கோட்டத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என 1,900 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தோ்தலையொட்டி கடந்த 21 ஆம் தேதி முதல் சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், தோ்தலுக்காக சொந்த ஊருக்கு வந்தவா்கள் மீண்டும் திரும்ப வசதியாக வரும் 27 ஆம் தேதி வரை கூடுதலாக 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா் மற்றும் மேட்டுருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோட்டுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் கூடுதலாக பயணம் செய்ய வாய்ப்புள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

10 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள திருவள்ளூா் மாநகரப் பேருந்து பணிமனை திட்டம்

வார இறுதிநாள்: சேலம் கோட்டத்தில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


