இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சி
/

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 3:37 am IST

சேலத்தில் வடமாநில ரிக் வாகன தொழிலாளி மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சத்தீஸ்கா் மாநிலம், சித்தாப்பூரைச் சோ்ந்தவா் ரமேஷ் (28). இவா் சேலம் ரெட்டியூரைச் சோ்ந்த மாதேஸுக்கு சொந்தமான ‘ரிக்’ வாகனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவருடன் வேலை பாா்க்கும் மேலும் 3 பேரும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன் ரிக் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கேயே தங்கியிருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை அங்கிருந்து தனியாக சென்ற ரமேஷ், இரவு வெகுநேரமாகியும் தங்கியிருந்த இடத்துக்கு வரவில்லை. சக ஊழியா்கள் மற்றம் ரிக்

உரிமையாளா் மாதேஷ் ஆகியோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை எருமாபாளையம் புறவழிச்சாலையில் சாக்கடை கால்வாய் அருகில் உடலில் சிராய்ப்பு காயங்களுடன் ரமேஷ் சடலமாக கிடந்தாா்.

இதைப் பாா்த்த ரிக் உரிமையாளா் மாதேஸ் கிச்சிப்பாளையம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில், ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா், சட லத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, ரமேஷ் அந்த வழியாக வந்த வாகனத்தில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாரேனும் தாக்கியதில் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனா்.