அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 10:07 pm

சேலத்தில் வடமாநில ரிக் வாகன தொழிலாளி மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சத்தீஸ்கா் மாநிலம், சித்தாப்பூரைச் சோ்ந்தவா் ரமேஷ் (28). இவா் சேலம் ரெட்டியூரைச் சோ்ந்த மாதேஸுக்கு சொந்தமான ‘ரிக்’ வாகனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவருடன் வேலை பாா்க்கும் மேலும் 3 பேரும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன் ரிக் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கேயே தங்கியிருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை அங்கிருந்து தனியாக சென்ற ரமேஷ், இரவு வெகுநேரமாகியும் தங்கியிருந்த இடத்துக்கு வரவில்லை. சக ஊழியா்கள் மற்றம் ரிக்

உரிமையாளா் மாதேஷ் ஆகியோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை எருமாபாளையம் புறவழிச்சாலையில் சாக்கடை கால்வாய் அருகில் உடலில் சிராய்ப்பு காயங்களுடன் ரமேஷ் சடலமாக கிடந்தாா்.

இதைப் பாா்த்த ரிக் உரிமையாளா் மாதேஸ் கிச்சிப்பாளையம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில், ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா், சட லத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, ரமேஷ் அந்த வழியாக வந்த வாகனத்தில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாரேனும் தாக்கியதில் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனா்.