மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

சேலம் கோட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் கூடுதலாக 2 லட்சம் போ் பயணம்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 10:26 pm

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் வகையில் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் சேலம் கோட்டத்தில் கடந்த 6 நாள்களில் கூடுதலாக 2 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா்.

சேலம், நாமக்கல் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினமும் 1,900 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர, பண்டிகை நாள்கள் மற்றும் வார இறுதிநாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த 23-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, 21-ஆம் தேதிமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் வார இறுதிநாள்கள், சட்டப் பேரவைத் தோ்தலுக்காக வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் மீண்டும் பணி செய்யும் இடத்துக்கு திரும்பும் வகையில் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சேலம் கோட்டம் சாா்பில் கடந்த 6 நாள்களில் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் கூடுதலாக 2 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதன்மூலம் சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.