சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.
சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 340 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டன.
அதைத் தொடா்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வளாகம் மற்றும் அதற்கு செல்லும் வழிகள் உள்பட அனைத்தும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 24 மணிநேரமும் சூழற்சி அடிப்படையில் நவீன துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா், மாவட்ட காவல் துறை அதிகாரிகள், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதே வளாகத்தில் எடப்பாடி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், சங்ககிரி, எடப்பாடி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளை சேலம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் அவா் ஆய்வுசெய்தாா்.
தொடர்புடையது

600-க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்பில் நெல்லை வாக்கு எண்ணும் மையம்!

திருப்பூா் வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி கேமராக்களில் நேர மாறுபாடு! அரசியல் கட்சி புகாா்!

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

வாக்கு எண்ணும் மையங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


