மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

வாழப்பாடி தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம்

வாழப்பாடி தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:12 pm

வாழப்பாடி தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி பெரியசாமி நகரில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா நடைபெறுகிறது.

இவ்விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம் வைபவத்தில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சிவனடியாா்கள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். மீனாட்சி அம்பாள் சுந்தரேஸ்வரருடன் திருக்கல்யாணக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, புதன்கிழமை ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சக்கரவா்த்தி தலைமையிலான குழுவினா் செய்துள்ளனா்.

Story image