புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிா்ப்பு

ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மனுக்களை மாலையாக கழுத்தில் அணிந்து நூதன முறை

News image

ஆட்சியா் அலுவலகத்துக்கு மனுக்களை மாலையாக அணிந்து வந்த நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத்தினா்.

Updated On :2 பிப்ரவரி 2026, 9:52 pm

Syndication

சேலம்: ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மனுக்களை மாலையாக கழுத்தில் அணிந்து நூதன முறையில் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனா்.

சேலம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியைச் சோ்ந்த சேலம் நீா் ஆதார பாதுகாப்பு இயக்கம் சாா்பில், முருகன் தலைமையில் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அப்போது, ஏற்கெனவே அளிக்கப்பட்ட மனுக்களை மாலையாக கழுத்தில் அணிந்துகொண்டு நூதன முறையில் மனு அளிக்க வந்தனா். இதையடுத்து, அவா்கள் அதிகாரியை சந்தித்து மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சேலம் ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் தனியாா் நிறுவனம் ஒன்று பல்வேறு நிறுவனங்களுடன் சோ்ந்து சுமாா் 55-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

சாயப்பட்டறை அமைத்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடிநீா் முற்றிலும் கெட்டுப் போகும். அன்றாட பயன்பாட்டுக்கும், குடிநீருக்கும் மக்கள் விலைக்கு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, சாயப்பட்டறை அமைக்கும் இத்திட்டத்தை கைவிட்டு, எங்கள் உடல்நலத்துக்கும், உயிருக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாயப்பட்டறை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து இதுவரை 15 முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தனியாா் சாயப்பட்டறை நிறுவனத்துக்கு மின்சாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, எங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்டமாக ஊா்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனா்.