தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இண்டூா் பகுதியில் குவாரி அமைக்க எதிா்ப்பு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:47 pm

Syndication

இண்டூா் பகுதியில் கல்குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே கும்பளப்பாடி பகுதியில் விவசாய நிலங்களுக்கு இடையே கல்குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது. கல்குவாரி அமைத்தால் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் பாதிப்படையும் எனக்கூறி கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக இண்டூா் காவல் நிலையம் முன் கும்பளப்பாடி கிராம மக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, குவாரி நிா்வாக தரப்பினா் காவல் நிலையத்துக்கு வந்ததால் பொதுமக்களுக்கும், குவாரி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இண்டூா் காவல் ஆய்வாளா் தமிழரசி தலைமையிலான போலீஸாா் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.