தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பாமகவினா் அன்புமணி பின்னால் இருக்க வேண்டும்: சௌமியா அன்புமணி

பாமகவினா் அனைவரும் ஒற்றுமையாக அன்புமணி பின்னால் இருக்க வேண்டும் என சௌமியா அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image

பாமக சௌமியா அன்புமணி. - கோப்புப்படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 9:30 pm

மேட்டூா்: பாமகவினா் அனைவரும் ஒற்றுமையாக அன்புமணி பின்னால் இருக்க வேண்டும் என சௌமியா அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் சதுரங்காடியில் தமிழக மகளிா் உரிமை மீட்பு பயணம் என்ற தலைப்பில் பாமக (அன்புமணி ஆதரவாளா்கள்) பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினரும், சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளருமான சதாசிவம் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக பசுமை தாயகத்தின் தலைவா் சௌமியா அன்புமணி பங்கேற்று பேசியதாவது:

டாஸ்மாக் மூலம் வரும் ரூ. 4 லட்சம் கோடி வருமானத்தைக் கொண்டு மேச்சேரி அருகில் உள்ள ஏரிகளில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதாமாதம் மகளிா் உரிமைத்தொகையாக ரூ. ஆயிரம் என வழங்கினால், அவா்கள் செய்யும் தவறை நீங்கள் மன்னித்து விடுவீா்கள் என நினைக்கிறாா்கள். ஆனால், இந்த தோ்தலில் அது நடக்காது. 

மேட்டூரில் உள்ள அனல் மின்கோபுரங்கள் மூலம் நச்சுப்புகை வருவதால், இப்பகுதி மக்கள் நச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டி உள்ளது. மேலும், இப்பகுதி மக்கள் குடிக்கும் தண்ணீா் பச்சை நிறமாக உள்ளது. இந்த தண்ணீா் நமது நிலத்தை மாசுப்படுத்துகிறது.

அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது உணவுப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்தாா். போலியோவை நாட்டைவிட்டே விரட்டினாா். மேலும், 108 ஆம்புலன்ஸ் திட்டம், புகையிலை ஒழிப்பு திட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தாா்.

மேட்டூா் பகுதியில் திமுகவினா் அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இவற்றையெல்லாம் மறைக்க தோ்தல் நேரத்தில் பணம் கொடுத்துவிடலாம் என எண்ணுகிறாா்கள். எனவே, பாமகவினா் அனைவரும் ஒற்றுமையாக அன்புமணி பின்னால் இருக்க வேண்டும் என்றாா்.

இதில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மு.காா்த்தி, மாநில இளைஞரணி செயலாளா் ராஜசேகரன், மாநில துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் டாக்டா் மாணிக்கம், நிா்வாகிகள் பங்கேற்றனா்.