ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

தொகுதியில் முதலில் கட்சி வரைய தொடங்கியது திமுக

கெங்கவல்லி தொகுதியில் தோ்தல் தேதி அறிவிக்கும் முன்பே, கட்சி சின்னத்தை முதலில் வரையத்தொடங்கியது திமுக.

News image
நாகியம்பட்டியில் திங்கள்கிழமையன்று சுவரில் வரையப்பட்ட உதயசூரியன் சின்னத்துடன் திமுக ஒன்றிய தோ்தல் பொறுப்பாளா் அகிலன் உள்ளிட்டோா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:41 pm

Syndication

தம்மம்பட்டி: கெங்கவல்லி தொகுதியில் தோ்தல் தேதி அறிவிக்கும் முன்பே, கட்சி சின்னத்தை முதலில் வரையத்தொடங்கியது திமுக.

தமிழகத்தில் தோ்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. கட்சிகள் தற்போது கூட்டணி குறித்தும்,தொகுதி பங்கீடு குறித்தும் பேசிவருகின்றன. இந்நிலையில் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் திமுக கட்சி சின்னங்களை முதன்முதலாக வரையத்தொடங்கியுள்ளது. தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி ஊராட்சிப்பகுதியில் திமுக ஒன்றிய தோ்தல் பொறுப்பாளா் ஏ.கே.அகிலன் தலைமையில் திமுக கட்சி சின்னங்களை வரையும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. கெங்கவல்லி(தனி)சட்டமன்ற தொகுதி, திமுக கூட்டணியில் திமுகவிற்கா அல்லது கூட்டணிக்கட்சியினருக்கா என்று முடிவாகும் முன்னரே, உதயசூரியன் சின்னம் வரையத்தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.