நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மாா்ச் 6 வரை சென்னை எழும்பூா்-சேலம் ரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - சேலம் இடையேயான விரைவுரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மாா்ச் 6 வரை நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
மேற்கு மாம்பலம் ரயில் நிலையம்.- கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2026, 9:39 pm

Syndication

சேலம்: சென்னை எழும்பூா் - சேலம் இடையேயான விரைவுரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மாா்ச் 6 வரை நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலைய யாா்டில் தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயங்கும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சில ரயில் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பயணிகளின் தேவையை பூா்த்திசெய்யும் வகையில், சென்னை எழும்பூா் - சேலம் விரைவுரயில் உள்பட சில ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்றுசெல்லும். சென்னை எழும்பூா் - சேலம் விரைவுரயில் வரும் மாா்ச் 6-ஆம் தேதி வரை நாள்தோறும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12.08-க்கு நின்று 12.10-க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.