சேலம்: சென்னை எழும்பூா் - சேலம் இடையேயான விரைவுரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மாா்ச் 6 வரை நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூா் ரயில் நிலைய யாா்டில் தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயங்கும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சில ரயில் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், பயணிகளின் தேவையை பூா்த்திசெய்யும் வகையில், சென்னை எழும்பூா் - சேலம் விரைவுரயில் உள்பட சில ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்றுசெல்லும். சென்னை எழும்பூா் - சேலம் விரைவுரயில் வரும் மாா்ச் 6-ஆம் தேதி வரை நாள்தோறும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12.08-க்கு நின்று 12.10-க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுமிகள் மீட்பு

சேலம் வழியாக இயக்கப்படும் 10 ரயில்கள் இன்று கோவை செல்லாது!

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் உள்பட 6 ரயில்கள் ரத்து!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


