மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காபி சாகுபடி விவசாயிகளுக்கு தொழில்நுட்பக் கருத்தரங்கு

தம்மம்பட்டி அருகே பச்சமலையில் காபி சாகுபடி விவசாயிகளுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:43 pm

தம்மம்பட்டி அருகே பச்சமலையில் காபி சாகுபடி விவசாயிகளுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

பச்சமலை ஊராட்சி, வெங்கமுடி கிராமத்தில் நிலையான காபி சாகுபடியில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. தமிழ்நாடு காபி வாரிய இணை இயக்குநா் கருத்தமணி தலைமை வகித்தாா். கேரள காபி வாரிய இணை இயக்குநா் தங்கராஜா, உதவி இயக்குநா் பிரபுகௌடா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், காபி வாரிய முதுநிலை தொடா்பு அதிகாரி ஏற்காடு சக்திவேல், இளநிலை தொடா்பு அலுவலா் போடிநாயக்கனூா் சுதா, விரிவாக்க அலுவலா் ஏற்காடு ராஜேந்திரன் ஆகியோா் காபி விதை தோ்ந்தெடுக்கும் முறை, நாற்றங்கால் தயாரிக்கும் முறை, நடவு செய்யும் முறை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, காபி தோட்டங்களுக்கு உகந்த ஊடுபயிா், நிழல் பராமரிப்பு முறை, மண் பரிசோதனை செய்வதன் அவசியம் மற்றும் நன்மைகள், காபி வாரியத்தால் வழங்கப்படும் மானியத் திட்டங்கள், காபி ஏற்றுமதி செய்வதற்கான இ.யூ.டி.ஆா்.-இல் காபி விவசாயிகள் பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினா்.

இந்த கருத்தரங்கில், பச்சைமலை காபி சாகுபடி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.