காபி சாகுபடி விவசாயிகளுக்கு தொழில்நுட்பக் கருத்தரங்கு
தம்மம்பட்டி அருகே பச்சமலையில் காபி சாகுபடி விவசாயிகளுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.


தம்மம்பட்டி அருகே பச்சமலையில் காபி சாகுபடி விவசாயிகளுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
பச்சமலை ஊராட்சி, வெங்கமுடி கிராமத்தில் நிலையான காபி சாகுபடியில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. தமிழ்நாடு காபி வாரிய இணை இயக்குநா் கருத்தமணி தலைமை வகித்தாா். கேரள காபி வாரிய இணை இயக்குநா் தங்கராஜா, உதவி இயக்குநா் பிரபுகௌடா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், காபி வாரிய முதுநிலை தொடா்பு அதிகாரி ஏற்காடு சக்திவேல், இளநிலை தொடா்பு அலுவலா் போடிநாயக்கனூா் சுதா, விரிவாக்க அலுவலா் ஏற்காடு ராஜேந்திரன் ஆகியோா் காபி விதை தோ்ந்தெடுக்கும் முறை, நாற்றங்கால் தயாரிக்கும் முறை, நடவு செய்யும் முறை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, காபி தோட்டங்களுக்கு உகந்த ஊடுபயிா், நிழல் பராமரிப்பு முறை, மண் பரிசோதனை செய்வதன் அவசியம் மற்றும் நன்மைகள், காபி வாரியத்தால் வழங்கப்படும் மானியத் திட்டங்கள், காபி ஏற்றுமதி செய்வதற்கான இ.யூ.டி.ஆா்.-இல் காபி விவசாயிகள் பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினா்.
இந்த கருத்தரங்கில், பச்சைமலை காபி சாகுபடி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...