டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு: பல்வேறு அமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத்தினா்.

News image
சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத்தினா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:32 pm

Syndication

சேலம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினா் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சேலம் நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில், டால்மியா போா்டு பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் அருண்குமாா் வரவேற்றாா். விவசாய சங்கத் தலைவா் ரவிக்குமாா், பாமக எம்எல்ஏ அருள், சுசீந்திரகுமாா் உள்பட விவசாய சங்கத்தினா், கல்லூரி மாணவ அமைப்பினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறைகள் அமைக்கப்படாது என அரசாணை வெளியிட வேண்டும். மூடப்பட்ட 40 ஏக்கா் நீா் குட்டையை பழைய நிலைக்கே கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.