பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மேட்டூா் அணையில் ஐஐடி பேராசிரியா் ஆய்வு

மேட்டூா் அணையின் 16 கண் பால பராமரிப்பு பணிகளை சென்னை ஐஐடி பேராசிரியா் அழகுசுந்தரமூா்த்தி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகளின் வளைவுகள் வலுப்படுத்தும் பணிகளை ஆய்வுசெய்த ஐஐடி கட்டடவியல் பேராசிரியா் அழகுசுந்தரமூா்த்தி.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:42 pm

Syndication

மேட்டூா் அணையின் 16 கண் பால பராமரிப்பு பணிகளை சென்னை ஐஐடி பேராசிரியா் அழகுசுந்தரமூா்த்தி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேட்டூா் அணையின் இடதுகரையில் உள்ள உபரிநீா் போக்கியின் 16 வளைவுகள் மற்றும் மதகுகளுக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள கவுன்டா் வெயிட் பாக்ஸ் ஆகியவை வலுப்படுத்தும் பணிகள் பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளுக்காக ரூ. 19 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் முதல்கட்டமாக 1, 2, 3 மற்றும் 4-ஆவது மதகுகளின் வளைவுகள் வலுப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. 

இப்பணிகளின் தரம்குறித்து ஆய்வுசெய்ய சனிக்கிழமை மேட்டூா் வந்த சென்னை ஐஐடி பேராசிரியா் அழகுசுந்தரமூா்த்தி, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், கட்டுமான நிறுவன அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேட்டூா் அணையின் இடதுகரையில் உள்ள 16 கண் மதகுகளின் வளைவுகள் வலுப்படுத்தும் பணிகளும், கவுன்டா் வெயிட் பாக்ஸ் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவற்றில், முதல் 4 வளைவுகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்பணிகள் ஐஐடி ஆலோசனைபடி நல்ல தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் பருவமழைக்கு முன்பாக நிறைவடையும் என்றாா்.