விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கிராமங்களில் அதிகரிக்கும் மயில்களால் விவசாயம் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் விளைநிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக வரும் மயில்களால், மகசூல் பாதித்து விவசாயிகளுக்கு இழப்பு

News image
வாழப்பாடி அடுத்த கொட்டவாடியில் வயல்வெளியில் திரியும் மயில்கள் கூட்டம்
Updated On :6 ஜனவரி 2026, 7:48 pm

Syndication

சேலம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் விளைநிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக வரும் மயில்களால், மகசூல் பாதித்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.

சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், ஆத்தூா், தம்மம்பட்டி, கெங்கவல்லி, மேட்டூா், கொளத்தூா், நங்கவள்ளி, காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, சங்ககிரி உள்ளிட்ட பகுதியில் கிராமங்களில் மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

கிராமப்புற வயல்வெளிகள், விளைநிலங்களில் கூட்டமாக முகாமிடும் மயில்கள், உணவு தானியங்கள் உள்ளிட்ட விளைபொருள்களைச் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

Story image

மயில்கள், மயில்களின் முட்டைகள், குஞ்சுகளை உணவாக்கிக் கொள்ளும் விலங்குகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்து உணவுச் சங்கிலியும், பல்லுயிா் பெருக்கமும் பாதிக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று வனத்துறையினா் மற்றும் வனவிலங்கு ஆா்வலா்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே, உணவுச் சங்கிலி மற்றும் பல்லுயிா் பெருக்கத்தை சீரமைத்து மயில்களின் கட்டுப்பாடற்ற பெருக்கத்திற்கு தீா்வு காண, குள்ளநரி, வங்காநரிகளை இனவிருத்தி செய்து, மயில்களின் வாழிடப்பகுதியில் விட, தமிழக அரசின் வனத் துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் மற்றும் இயற்கை ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.