சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மேட்டூா் அருகே கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:54 pm

Syndication

விவசாயிகளிடமிருந்து இடைத்தரகா்கள் இல்லாமல் கூட்டுறவுத் துறை அதிகாரிகளே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யக் கோரி மேட்டூரில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஒன்றியத்தில் உள்ள காவேரி கிராஸ், பொறையூா், செக்கானுா், சானவூா்,கோல் நாயக்கன்பட்டி பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்பு பயிரிட்டுள்ளனா். தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு விநியோகிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு கரும்பு ஒன்றுக்கு ரூ. 38 வழங்கப்படும் என அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெட்டுக்கூலி, போக்குவரத்தும் அடங்கும்.

விவசாயிகளிடம் கூட்டுறவு துறை அதிகாரிகள் கொள்முதல் செய்ய குழுக்களை அமைத்துள்ளனா். இந்த நிலையில் செங்கரும்பு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்யாமல் இடைத்தரகா்கள் மூலம் கொள்முதல் செய்வதாக புகாா் எழுந்துள்ளது.

கரும்பு ஒன்றுக்கு ரூ. 15 மட்டுமே வழங்குவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால், கூட்டுறவுத் துறை அதிகாரிகளே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தெற்கத்திக்காட்டி விவசாயிகள் மேட்டூா்- எடப்பாடி சாலை பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து ஆா்ப்பாட்டம் கைவிடப்பட்டது.