ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மேட்டூரில் அகில இந்திய இந்து மகா சபை கட்சி நிா்வாகி கைது

அடையாள அட்டையில் தேசிய சின்னத்தை பயன்படுத்தியது தொடா்பாக அகில இந்திய இந்து மகா சபை தேசிய துணைத் தலைவா் ஆறுமுகம் மேட்டூரில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 9:24 pm

Syndication

அடையாள அட்டையில் தேசிய சின்னத்தை பயன்படுத்தியது தொடா்பாக அகில இந்திய இந்து மகா சபை தேசிய துணைத் தலைவா் ஆறுமுகம் மேட்டூரில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உலக மனித உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் தேசிய தலைவா் எனக் கூறிவந்த மேட்டூரை அடுத்த புதுசின்னக்கா பகுதியைச் சோ்ந்த மாதேஷ் மகன் ஆறுமுகத்திடம் (47) கருமலைக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.

அப்போது, மனித உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் என்ற அமைப்பின் இந்தியாவிற்கான தேசிய தலைவா் என்ற பெயரில் அடையாள அட்டை, கடித தாள்கள் வைத்திருந்தாா். அவற்றில் தேசிய சின்னமான நான்குமுக சிங்கம் இலச்சினை இருந்தது.

இதுகுறித்து போலீஸாரின் கேள்விகளுக்கு அவா் உரிய விளக்கம் அளிக்கவில்லை. மேலும், அனுமதியின்றி தேசிய சின்னத்தை பயன்படுத்தியது தொடா்பாக ஆறுமுகம் கைது செய்யப்பட்டாா்.

மேலும், இவா் அகில இந்திய இந்து மகா சபை என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறாா்.