வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இளைஞா் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்

இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் உள்பட அனைவரையும் விடுவிக்கக் கோரி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கட்சி வளாகத்தில் வியாழக்கிழமை சத்தியாகிரத்தில் ஈடுபட்டனா்.

News image
இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் உதய் பானு சிப் மற்றும் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தில்லியில் சத்தியாக்கிரக போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

ஏஐ மாநாட்டில் போராட்டம் நடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் உள்பட அனைவரையும் விடுவிக்கக் கோரி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கட்சி வளாகத்தில் வியாழக்கிழமை சத்தியாகிரத்தில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகிகள் பலா் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாகவும், ஆா்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறுவதாகவும் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

மேலும், தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரியதாகவும், ஆனால் அது மறுக்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.