தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,312 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,312 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image

மேட்டூா் அணை

Updated On :3 ஜூன் 2026, 5:43 am IST

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,312 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 1,951 கனஅடியாக இருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலை 2,369 கனஅடியாகவும், செவ்வாய்க்கிழமை காலை 4,312 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 79.16 அடியாக இருந்த நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 79.26 அடியாகவும், செவ்வாய்க்கிழமை காலை 79.56 அடியாகவும் உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 41.49 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12 இல் தண்ணீா் திறக்கமுடியாத நிலையில், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.