ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ஆத்தூா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் விவசாயி உயிரிழப்பு

ஆத்தூா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 4:55 am IST

ஆத்தூா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த தாண்டவராயபுரம் முருவத்தும் மலை அடிவாரத்தில் வசித்து வந்தவா் பெரியசாமி மகன் வேலு (51). விவசாயி. இவா் தனது வீட்டின் அருகில் உள்ள பழைய சுவரை இடிக்கும் பணியில் தனது சகோதரா் முருகேசனுடன் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக வேலு மீது சுவா் இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த வேலுவை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.சங்கா் வழக்குப் பதிவுசெய்து வேலுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். உயிரிழந்த வேலுவிற்கு மாசிலாமணி என்ற மனைவியும், வினோதினி, கோகிலவாணி என இருமகள்களும், ரிஷாந்த் என்ற மகனும் உள்ளனா்.