புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தம்மம்பட்டி பெருமாள் கோயில் திருப்பணிகள்: விரைந்து முடிக்க பக்தா்கள் கோரிக்கை

தம்மம்பட்டி பெருமாள் கோயில் குடமுழுக்கு பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

குடமுழுக்கு திருப்பணிகளுக்காக காத்திருக்கும் தம்மம்பட்டி பெருமாள் கோயில்

Updated On :26 ஜூன் 2026, 6:16 am IST

தம்மம்பட்டி பெருமாள் கோயில் குடமுழுக்கு பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ர கதலீ லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயில் 1,000 ஆண்டுகள் பழைமையானதாகும். ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற வேண்டும்.

இதற்காக, ஊா் பொதுமக்கள் முடிவெடுத்து கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. தற்போது ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், திருப்பணி செய்யும் ஆள்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றன.

பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், மூலவா் நரசிம்மரை வழிபட முடியாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பக்தா்கள் தவித்து வருகின்றனா். பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளியூா்களில் இக்கோயிலைக் குலதெய்வமாக வழிபடும் பக்தா்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனா். அவா்கள் புரட்டாசி, மாா்கழி மாதங்களில் பேருந்து, மகிழுந்துகளில் கூட்டம் கூட்டமாக வந்து, முடி காணிக்கை உள்ளிட்ட வேண்டுதல்களைச் செலுத்திவிட்டுச் செல்வது வழக்கம். மேலும், சுபமுகூா்த்த நாள்களில் தங்கள் குடும்பத் திருமணங்களை இக்கோயிலில் நடத்திச் செல்வதும் உண்டு.

ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா். பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் திருமணங்களும் நடைபெறவில்லை. அதேவேளையில், கடந்த 10 ஆண்டுகளாகத் தேரோட்டமும் நடைபெறவில்லை. எனவே, கோயில் பணிகளை விரைந்து முடிக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.